காதல்









"புல்வெளி மீது நடக்காதீர்"
அங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு
உன் பாதம் அதன் மீது படாததால்..."

"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே
காற்றெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொண்டு
உனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன
உன் பூ முகத்தை முத்தமிட..."

"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன
உன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று..."

"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன
காலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்..."

"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,
ஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது
உனை தீண்டிய இன்பத்தில்...."

"காதலுக்குள் காதல்"
இதை இப்படி சொன்னால் என்ன..
"உனக்குள் நான்"

"கவிதையில் அடங்கிவிடுகிறாய்
உன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்..."

"நாளை உலகத்தின் கடைசி நாள்
என்றாலும் கவலை இல்லை
இன்று உனை கண்டு என் காதலை சொன்னால்..."


சுட்ட இடம்

Posted in Labels: |