முத்தம்






கொஞ்சிக் கொஞ்சி
ஒரு முத்தம் கேட்டேன்
கெஞ்ச வைத்து
விட்டாயடி

குடுத்தால் என்ன
குறைந்தா போய்விடுவாய்
எப்போது வேண்டும் சொல்
திரும்ப தந்துவிடுகிறேன்

Posted in Labels: |

வெட்க சிவப்பு






காதல் பேசும்போது
வெட்கி சிவக்கிறாயாம்
உன் தோழி சொல்கிறாள்
வெளியில் சொல்ல போகிறாள்
காதல் மேல்
ஃபேர் அண்ட் லவ்லி - கம்பெனி
கேஸ் போட போகிறார்கள்

Posted in Labels: |

தண்டனை






நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
மனதுக்குள் வைத்திருப்பேன்
தண்டனை உண்டு
எல்லாவற்றிற்கும்!!





இதுதான் உனக்கான
தண்டனை என
நிழற்படம் அனுப்பினால்
ச்சீ என்கிறாய்
வேண்டாமடி தண்டனை
அதிகமாகிகொண்டே போகும்!!!




வெட்கத்தை எல்லாம் - நீ
அங்கே சிந்திக்கொண்டிருக்கிறாய்
நான் எப்போதடி பார்ப்பததை
நீ ஓர் இடத்தில்
நான் ஓர் இடத்தில்
சேமித்து வையடி
எனக்காகவும் கொஞ்சம்

Posted in Labels: |

பயணக்குறிப்புகள் ஏப்ரல் 15, 2008 - II

பயணக்குறிப்புகள் ஏப்ரல் 15, 2008

காலைல 7 மணிக்கு போய் மயிலாடுதுறைல இறங்கி அபி அப்பாவுக்கு போன் அடிச்சேன். ஏற்கனவே மயிலாடுதுறைக்கு போய் அபி அப்பாவுக்கு போன் செஞ்சிட்டு ரோடுல நின்னு தவிச்ச கதைய சக ப்ளாகர் நண்பர்கள் கிழிச்சி தொங்கவிட்டிருந்ததால் குசும்பனிடம் 15 காலைல இருந்தே ரூம் அரேஞ்ச் செய்ய முன்னேற்பாடாய் சொல்லி இருந்தோம்.

மொத ரிங்லயே போன் எடுத்தார் (நம்புங்கப்பா பிலிஸ்). நான் இருந்தது 4 வது ப்ளாட்பாரம் அங்க பக்கத்துல ஒரு அரசமரம் இருந்தது. எங்க இருக்கீங்க அப்படின்னு அபிஅப்பான்னு கேக்க , இங்க அரசமரம் பக்கத்துல இருக்கோம்னு நாங்க சொல்ல நானும் அரச மரத்துக்கு பக்கத்துலதான் இருக்கேன்னு அவர் சொல்ல, அங்க எங்களைத்தவிர யாரும் இல்ல திரும்ப போன் அடிச்சி கேட்டப்ப ஸ்டேஷன் வெளில இருக்க அரசமரம்னாரு. ஸ்டெப்ஸ் ஏறி இறங்கறப்ப பாத்தா மயிலாடுதுறை ஸ்டேசனை சுத்தி ஒரு ஏழெட்டு அரசமரம் இருக்கு. :(

நந்து அண்ணன், காயத்ரி நாங்க எல்லாம் ஒன்னா வரோம்னு சொல்லீருந்ததால டாண்னு வந்திட்டார்னு அப்புறம் தெரிஞ்சிகிட்டேன்.

கார்ல போறப்பவே இதுதான் முத்துலட்சுமி வீடு இதுதான் அதுன்னு வழிஎல்லாம் சொல்லிகிட்டே வந்தார். ஒரு ஸ்டேடியம் காமிச்சு என்னமோ சொன்னார். வாக்கிங் பத்தி என்னமோ சொன்னார். ஒன்னும் புரியலை!!.

இறங்கி வீட்டுக்குள்ள போனதும் எங்க நிலா எல்லாம்னு அபி அம்மா கேட்க ட்ரெயின்ல இருந்த அதே ஃபார்ம்ல இல்லைங்க நிலாக்கு உடம்பு சரியில்லைன்னு விட்டுட்டு நந்து மட்டும்தான் வந்திருக்கார்னு இங்கயும் சஞ்சய்ய கை காமிச்சாச்சு. நம்ம இளைய கவிய நிஜமா நல்லவன் ஆக்கியாச்சு. அவங்க ஏற்கனவே நந்து அண்ணாவ போட்டோல பாத்திருக்காங்க போல என்னங்க முடி இப்பிடி கொட்டிருச்சே உங்களுக்குன்னு கேக்க சிரிக்கவும் முடியாம சிரிக்காமவும் இருக்க முடியாம ஆகிருச்சு.

அங்க நடந்த சாப்பாட்டு கடைய பத்தி நம்ம சஞ்சய் விலாவாரியா பதிவு போட்டிருக்கறதால அத அங்க பாத்துக்கங்க.

டிபன் சாப்பிட்டிருக்கப்ப லான்ச்ல போற ப்ளான் செஞ்சிருந்ததை பத்தி பேச்சு வந்தது அப்ப நம்ம சஞ்சய் குடுகுடுன்னு அதுதான் நீங்களும் நந்து அண்ணாவும் சொதப்பீட்டீங்களேன்னு சொல்ல அபி அப்பா ஒரு நிமிசம் குழம்பி அப்ப நீங்கல்லாம் உண்மைலயே யாரு யாருன்னு ஐடி ப்ரூப்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டார்.

அப்படியா ஜாலியா பொழுது போச்சு. சாயந்திரம் 6 மணிக்கு இளைய கவி போலி நிஜமா நல்லவன் சாரதியாய் மாற (அதாம்பா அவர்தான் அன்னைக்கும் அடுத்த நாளும் நம்ம ட்ரைவர்) கிளம்பி திருவாரூர்க்கு போனோம்.

Posted in Labels: |

ச்சும்மாதான் இந்த விடியோ

Posted in Labels: |

ரெண்டு



வ.வா.ச. ரெண்டு போட்டிக்கு





அமைதிக்கு
பெயர்தான் ஹேமா
உன் அமைதியில்
ஏதடி
கில்மா!!

அடி வாங்குவ ராஸ்கல்
கைலயா , கட்டைலயா??
கட்டைலதான்






நீயே ஒரு கட்டை
எதுக்கடி
தேடுற அடிக்க
இன்னொரு
கட்டை !!

வீக் எண்ட் ஜொள்ளு



படம் முழுசா தெரியலைனா படத்து மேல க்ளிக்குங்க!







ஹாய் கேர்ள்ஸ் அப்பிடி என்னைய பாக்காதீங்க எனக்கு வெக்க வெக்கமா வருது!!!!

Posted in Labels: |

பயணக்குறிப்புகள் ஏப்ரல் 15,2008

எத்தனை மணிக்கு ட்ரெயின் அங்க எந்த கம்பார்ட்மெண்ட் அது இதுன்னு கரூர் வரதுக்கு முன்னாடியே இளைய கவியிடம் 4 தடவை சஞ்சய்யோட செல்லில் இருந்து நாங்களும் சஞ்சய் செல்லுக்கு அவரும் பேசியிருந்தோம் இருந்தும்!!!!.

அதிகாலை 3 மணி அளவில் கரூர்ல நண்பர் இளையகவி வந்து ஜாயின் பண்ணிகிட்டார். சின்ன விளையாட்டு விளையாடுவொம்னு தோணிச்சி. நாந்தான் இறங்கி அவரை எங்க 'பெர்த்'க்கு கூட்டிகிட்டு வந்தேன். கூட்டிகிட்டு வந்து இவர்தான் 'கோவி கண்ணன்' அப்படின்னு சஞ்சய்யையும் இவர்தான் 'நாமக்கல் சிபி'ன்னு இம்சையையும் அறிமுகப்படுத்தி வெச்சேன்.

இளைய கவி ஆனாலும் அனியாயத்துக்கு அப்பாவியா இருக்க !!!!
ஆப்பு எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நீ ரொம்ப நல்லவன்யா!!!

இ.கவி :கண்ணன் சார் நீங்க சிங்கப்பூர்ல இல்ல இருக்கீங்க இங்க எப்பிடி?
போலி கோவி கண்ணன் : இப்பதாங்க சென்னைக்கு ப்ளைட்ல வந்தேன் நம்ம மக்கள் குசும்பன் கல்யாணம்னு அப்பிடியே பிடிச்சி போட்டுகிட்டு வந்துட்டாங்க!!!!

இ.கவி: சித்தப்பு நாம சாட் பண்ணமே அதை பத்தி இதை பத்தி
போலி சிபி : ஆமா பண்ணம்ல !!!

இப்பிடியாக பலப்பல விசயங்கள் பேசிகிட்டிருக்கும் போதே கீழ இருந்து ரெண்டு பேர் பரிதாபமா சார் பிலிஸ் பிலிஸ் கொஞ்சம் தயவு செய்யுங்க நாங்க கொஞ்சம் தூங்கணும்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க!!

கரூர் வரதுக்கு முன்னாடி 1.30 மணி அளவில் ஒரு 'பாப்பா' லைட்ட போட்டுகிட்டு படிக்கிற மாதிரி சீன் பண்ணிகிட்டிருந்துச்சு. எங்க சவுண்ட் அலப்பறைல அது லைட்ட ஆப் செஞ்சிட்டு கவுந்து படுத்துருச்சி.

பதிவர் பட்டறை , பின், முன் , நடு நவீனத்துவம் மற்றும் பலப்பல விசயங்கள் அலசி தொவைச்சி தொங்கவிடப்பட்டதால் அது எல்லாம் 'சென்சார்டு'.

ஒரு வழியா காலை நாலரை நாலே முக்காலுக்கு படுத்தோம் ஏழு மணிக்கு சரியாக மயிலாடுதுறை வந்தாச்சு.

Posted in Labels: |

பயணக் குறிப்புகள் ஏப்ரல் 14,2008

இரயில் வண்டி காலை 7 மணிக்கெல்லாம் மிகச்சரியான டைம்க்கு கோவை வந்து சேர்ந்தது. கீழே இறங்கி சஞ்சாய் ராமசாமிக்கு போன் செய்தால் மாம்ஸ் நான் வர 45 நிமிசம் ஆகும் அட்ரஸ் குடுக்கறேன் வந்திடுங்க அப்படின்னாப்டி (நெசமாலுமே அப்பிடித்தான் சொன்னாப்டி).

கோயம்பத்தூர் ஸ்டேசன்ல இருந்த ஜகஜோதியான பாப்பாங்களை எல்லாம் பாத்து , இல்லைய்யா ஒரு மணி நேரம் ஆனாலும் பரவால்ல நான் இங்கயே இருக்கேன் நீ பொறுமையா வா அப்படின்னு சொன்னேன். பாத்தா பக்கத்துல நின்னு பேசிகிட்டிருக்காப்டி. அங்கிர்ருந்து நகர மனசே வரலை. திவ்யா இதெல்லாம் படிச்சிட்டு உங்க ஊரை பத்தி ஆஹா ஓஹோன்னு நினைச்சிக்காத எல்லாம் சேச்சிங்க.

சஞ்சாய் ரூம்க்கு வந்து பல்லு மட்டும் தேச்சி கொஞ்ச நேரம் மொக்கையா பேசிகிட்டிருந்ததுக்கே 10.30 ஆகிடுச்சி சரி டிபன் சாப்பிட்டு குளிச்சா கொறைஞ்சா போயிடுவோம்னு, குளிச்சிட்டு சாப்பிடுவோம்னு சொன்ன அவனையும் கேவலமா பாத்ததுல கெளம்பி வந்திட்டாப்டி பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டெல்க்கு போய் தோசை சாப்பிட்டு வந்து திரும்ப பேசிகிட்டு மெயில் செக் பண்ணீட்டு கொஞ்ச நேரத்துல குளிச்சி (பிலிஸ் நம்புங்க). கோயமுத்தூர்ல எங்க ஆபீஸோட ஒரு கிளை இருக்கு. எதுக்குதான் இந்த மாதிரி சின்ன கிராமத்துல எல்லாம் கிளை அலுவலகம் போடறாங்களோ தெரியலை திவ்யா :( . அங்க போய் இரு நண்பர்களை பாத்து பேசிட்டு அப்பிடியே சாப்பிட்டு வந்தா 3 மணி கட்டைய சாத்தியாச்சு மயிலாடுதுறை ட்ரெயின் ஈரோடுல இருந்து ராத்திரி 1 மணிக்குதான் ஒரு 6 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி போகலாம்னு ப்ளான். அங்கிருந்து நந்து, நிலா, நிலா அம்மா, கவிதாயிணி, இம்சை எல்லாம் ஒன்னா போறதா ப்ளான்

6 மணிக்கு கிளம்பி பஸ் பிடிச்சி 8.30 மணிக்கு ஈரோடு நிலா பாப்பா வீட்டுக்கு போய் சேர்ந்தோம். பஸ்ல போறப்பவே போன் கவிதாயிணிகிட்ட இருந்து அப்பாவுக்கு 10 நாளா உடம்பு சரியில்ல அதனால வரலைன்னு, 10 நாளா உடம்பு சரியில்லங்கிறது இப்பதான் தெரிஞ்சது போல . அதுக்குள்ள நிலா பாப்பாக்கு உடம்பு சரியில்ல நந்து , நிலா அம்மாவும் வரதில்லைன்னு தகவல் கடுப்பாயிடிச்சி யோவ் ட்ரைவர் பஸ்ஸ கோயமுத்தூர்க்கே திருப்புய்யான்னு சொன்னா அவன் திருப்ப மாட்டிக்கிறான்.

பாவம் நிலா அம்மா எங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி சுட்டு போட்டு கிச்சனுக்கும் டைனிங்குக்கும் ஷட்டில் சர்வீஸ் ஓடி ஓடி டயர்ட் ஆகீட்டாங்க!! ஒரு வழியா சாப்பிட்டு எழுந்தா குருமா எல்லாம் காலி வெறும் சப்பாத்தி மட்டும்தான் நிலா அம்மாவுக்கு இருந்தது. நடுவுலயே நந்து எங்க கூட ஜாயின் பண்ணிகிட்டதால அவருக்கு கிடைச்சது.

12.30க்கு கிளம்பி ஈரோடு ஸ்டேசன் வந்து இம்சை பெங்களூர்ல இருந்து வந்துகிட்டிருக்கார் நாங்க போகற ட்ரெயின்ல அவரை மீட் பண்ணி 10 - 15 நிமிசம் பேசிட்டிருந்திட்டு நந்து கிளம்பி போனார்.

2.45க்கு கரூர்ல நம்ம இளைய கவி ஜாயிண் பண்ணீகிட்டார்.

(தொடரும்)

பயணக் குறிப்புகள் ஏப்ரல் 13,2008

ஞாயித்துகிழமை எப்பவும் போல சோம்பேறித்தனமா தூங்கி எழுந்து பொறுமையா பல்ல தேச்சு (பிலிஸ் நம்புங்க) , குளிச்சி (பிலிஸ், பிலிஸ் திரும்ப இன்னொரு தரம் நம்பிடுங்க) ஹோட்டெல்கு போய் ரெண்டு தோசைய தின்னுபிட்டு சன்மியூசிக் பாத்துகிட்டே ஆன்லைன்ல சாட் பண்ணி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சாயந்திரம் ஆகீடுச்சி அவசர அவசரமா பேக்கிங் ஆரம்பிச்சி கிளம்பி மங்களூர் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்க்கு வந்து வெஸ்ட் கோஸ்ட் பிடிச்சேன்.

நாலு ப்ளாட்பாரம் இருந்துட்டா அது செண்ட்ரலான்னு மங்களூரை பாத்த சஞ்சய் ராமசாமி கேக்கறது என் காதுல விழுது என்ன பண்றது லல்லு ப்ரசாத் யாதவதான் கேக்கணும்.

எப்பவும் ட்ரெயிண்ல ட்ராவல் பண்றப்ப ரிசர்வேசன் சார்ட்ல என் பேர் இருக்கான்னு பாக்கிறேனோ இல்லையோ என் பக்கத்து சீட்டுல யார் யார் இருக்காங்கன்னு பாப்பேன். எல்லாம் என்னோட சேப்டிக்குதான் ச்சின்ன பையன்ல. அதுவும் கேரளா வழியா போற ட்ரெயின், சேச்சிங்க அழிச்சாட்டியம் தாங்காது :( . நிம்மதியா தூங்க முடியாது.

எனக்கு எப்பவுமே ஒரு ராசிங்க எப்பவும் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது இந்த தடவையும் அந்த மாதிரி ஒரு அசம்பாவிதமும் நடந்திடலை என் முன்னாடி, பக்கத்து சீட்டுல மட்டும் இல்ல என் கம்பார்ட்மெண்ட் முழுசுமே தடிப்பசங்கதான் அதனால எந்த விதமான வீண் டென்சனும் இல்லாம நிம்மதியா படுத்து தூங்கிகிட்டே அடுத்த நாள் காலை 7 மணிக்கு கோயம்பத்தூர் போய் சேர்ந்தேன்.

Posted in Labels: |

வீக் எண்ட் ஜொள்ளு

படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்க!!



குடும்ப விளக்கு





குத்து விளக்கு






இப்ப
பெட்ரமாக்ஸ் விளக்கு





இது போனஸ் பிக்சர்ஸ்
























Posted in Labels: |

என்ன கொடுமை இது ஆப்பீசர்ஸ்

நடுவானில் இளம் பைலட்கள், "தண்ணி' போட்டு, "ரொமான்ஸ்' செய்து பயிற்சி விமானத்தை, ஏரியில் தலைக்குப்புற கவிழ்தனர்!

புனே அருகே பாரமதியில், விமானம் ஓட்ட பயிற்சி தரும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பயிற்சி விமானம் ஒன்று, கடந்த 14ம் தேதி, ஏரியில் தலைக்குப்புற விழுந்து விட்டது.விமானத்தில் இருந்த ஒரு ஆண், ஒரு பெண் பைலட் உயிருடன் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்கள் பிழைத்துக் கொண்டனர்.

"நடுவானில் தொழில்நுட்ப கோளாறினால் விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது' என்று இரு பைலட்களும் கூறினர்.

முழு விசாரணைக்கு பின் "நடுவானில் விமானம் பறக்கும் போது, கடமை தவறிய நிலையில் இரு பைலட்களும் இருந்துள்ளனர்; விமானம் விபத்துக்குள்ளாக அவர்கள் தான் காரணம்' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "பயிற்சி விமானத்தில் பறந்து கொண்டிருந்த ஆண், பெண் பைலட் இருவரும் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள்; இருவரும் விமானி அறையில் மது குடித்துள்னர்; சிகரெட்டும் பிடித்துள்ளனர். அவர்கள் காதல் வயப்பட்டதால் தான் விமானம் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது. விபத்துக்குள்ளாக இதுவே காரணம்' என்று தெரிவித்தனர்.

பயிற்சியின்போதே இப்பிடின்னா என்ன கொடுமை இது ஆப்பீசர்ஸ்!?!?!?

செய்தி சுட்டி

Posted in Labels: |