மங்களம் தருவாள் மங்களாம்பிகை


மங்களம் தருவாள் மங்களாம்பிகை






மங்களூர் என்ற ஊரின் பெயர் பெருமையே மங்களாதேவி திருக்கோவில் அமையப்பெற்றுள்ளதே. மங்களாதேவி திருக்கோவில் மங்களூர்-செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகும். (மங்களூரில் மங்களூர் செண்ட்ரல், மங்களூர் ஜங்ஷன் என இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளது.).

தக்ஷின கன்னடாவை தோற்றுவித்தவர் பரசுராம். பரசுராமின் கனவில் அன்னை கூறியபடி நேத்ராவதி, குமாரராதா, பால்குனி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் மங்களாதேவி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.






தசரா (நவராத்திரி) 9 நாட்களும் இங்கு அன்னை மங்களா தேவிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மங்களா பார்வதி விரத பூஜை செய்பவர்களுக்கு மனம் விரும்பும்படி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

மங்களூரில் பார்க்க வேண்டிய இன்னும் இரு புராதாண கோவில்கள் கதிரி மஞ்சுநாதர் ஆலயம், குதிரொளி கோகர்நாத் ஆலயம்.




கதிரி மஞ்சுநாதர் ஆலயம்


கதிரி மஞ்சுநாதர் (சிவன்) மங்களூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலும் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்றாகும்.




காசிபாகீரதி தீர்தம்


இங்கு காசிபாகீரதி எனும் தீர்தத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் வந்து 'கோமுக' எனப்படும் குளங்களை நிறைக்கிறது.








குதிரொளி கோகர்நாதர் ஆலயம்


குதிரொளி கோகர்நாதர் ஆலயம் 1912ல் நாராயண குரு என்பவரால் கட்டப்பெற்றது. பழைய கேரள ஆலையங்களை போன்று வடிவமைக்கப்பட்ட இந்த கோவில் 1991ல் சோழர்கால ஆலயத்தை போன்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்டது. சலவைக்கற்களால் இழைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான கோவில் பார்ப்பதற்கு மிக ரம்மியமான ஒன்றாகும். நவராத்திரி 9 தினங்களும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோவிலும் நகரத்தின் மிக மத்தியில் அமையப்பெற்றுள்ளது.


மங்களூரை சுற்றி

கட்டில் துர்கா பரமேஷ்வரி

கட்டில் துர்கா பரமேஷ்வரி ஆலயம் மங்களூரில் இருந்து 29 கி.மீ தொலைவில் நந்தினி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. ஆலயத்தின் இருபுறமும் ஆறு அலைபுரண்டு ஓடுவதை பார்க்க கண்கொள்ளா காட்சியாகும்.

உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்

உடுப்பி கிருஷ்ணர் ஆலயம் உலகப்புகழ் வாய்ந்த ஆலயம் ஆகும். மங்களூரிலிருந்து 60 கி.மி தொலைவில் உள்ளது.

கொல்லூர் மூகாம்பிகா
கொல்லூர் மூகாம்பிகா மங்களூரிலிருந்து 130 கிமீ , உடுப்பியிலிருந்து 70 கிமீ.

சிருங்கேரி
சிருங்கேரி மங்களூரிலிருந்து 100 கிமீ.
கொல்லூரிலிருந்து சிருங்கேரிக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் 60கிமீ.

ஹொரநாடு அன்னபூர்ணேஷ்வரி
மங்களூரிலிருந்து 200 கிமீ.
சிருங்கேரியில் இருந்து ஒன்றரை அல்லது இரண்டு மணி நேர பயணம் (மலைப்பாதை தூரம் குறைவு).

தர்மஸ்தலா
மங்களூரிலிருந்து 70கிமீ. ஹொரநாடிலிருந்து மங்களூர் வரும் போது செல்ல முடியும்.

சுப்ரமண்யா
மங்களூரிலிருந்து 100 கிமீ.
(தர்மஸ்தலாவிலிருந்து மங்களூர் வரும் முன்பு பார்க்கலாம். )


மேலே உள்ள வரிசைப்படி கோவில்களை பார்த்து வந்தால் இரண்டரை நாட்கள் அல்லது மூன்று நாட்களில் மேலே உள்ள அனைத்து கோவில்களையும் பார்க்க முடியும்.

ஜூன் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் இங்கு வருடத்தில் 5 முதல் 6 மாதங்கள் நல்ல மழை பெய்வதால் பயணதிட்டம் போடும்போது கவனத்தில் கொள்வது நல்லது.