வாழத்தெரியாத வாழ்க்கை

நேற்று மார்ச் 24, 2008 அமித் என்ற இளைஞர் அவரது மனைவி ரிங்குவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமித் புத்திராஜ், 30, பெங்களூர் இன்போசிஸிலும், ரிங்கு சச்தேவ் ஸ்டாண்டர்ட் சாடர்ட் வங்கியிலும் வேலை பார்த்து வந்தனர். ரிங்குவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினாலேயே கொலை செய்ததாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ஹோலிப்பண்டிகையன்று (நேற்றுமுன்தினம்) தொலைபேசியில் அமித்துடன் பேசியதாகவும் சந்தோசமாகவே பேசியதாகவும். இப்படி ஒரு சம்பவத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான சுட்டி

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும். நேற்று மற்றும் இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள இந்த செய்தி மிக்க மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்கொலை என்பது அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவு என்கிறார்கள். கொலையும் அப்படியா?

எந்த காரணமாக இருந்தாலும் வாழ்வை வாழவேண்டிய வயதில் தவறிய இருவருக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.

எவ்வாறு இதை அவர் எதிர்கொண்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Posted in Labels: |