சர்க்கரை பொங்கல் செய்(த)முறை

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி = 1 பங்கு
வறுத்த பாசி பயறு = 1/3 பங்கு
சர்க்கரை = 1 பங்கு
தேங்காய் பால் = 2 பங்கு
நீர் = 3 பங்கு
முந்திரி பருப்பு = 18 சரியாக (கூடவோ குறையவோ கூடாது)
உலர்ந்த திராட்சை = 2 மே.க

செய்முறை:

1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.

2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தீய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.

3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் முந்திரி & உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

Posted in Labels: |