Showing posts with label சிரிப்பு. Show all posts
Showing posts with label சிரிப்பு. Show all posts

படிங்க சிரிங்க....

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..

ஏன்.. ரொம்ப சண்டை போடறாரா..?

இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
_________________

ஏன் உங்களை அரண்மனை வேலையில் இருந்து நீக்கிட்டாங்க..?

மாமன்னர் வருகிறார்ன்னு சொல்றதுக்கு பதிலா மாமனார் வருகிறார்ன்னு சொல்லித் தொலைச்சுட்டேன்..!
_________________

கோவிலில் இருவர்..

யோவ்.. என்ன உண்டியலுக்குள்ளே கை விடறே..?

ஹி..ஹி.. தப்பா நினைக்காதீங்க.. 50 பைசா போடறதுக்கு பதிலா 1 ரூபாய் போட்டுட்டேன்.. அதான் பாக்கிக் காசை எடுக்கறேன்..
_________________

கல்யாண வீட்டில்..

மாப்பிள்ளை அடிக்கடி தரை டிக்கெட்டில் சினிமா பார்ப்பாரோ..?

அட.. ஆமாம்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?

கரண்ட் கட் ஆனதும் மண்டபமே கிழியறாப்பல விசில் அடிக்கிறாரே..!
_________________

புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.

மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?


புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..

_________________

சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?

என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.

_________________

நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?

மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.

_________________

ஊர்ல சாப்பாடு எங்க விற்கும்?

ஊர்ல மட்டுமில்ல.. எல்லா ஊர்லயும் தொண்டைல தான் விக்கும்.

_________________

டாக்டர் : இவருக்கு எப்படி இவ்வளவு அடிபட்டுச்சு?

நண்பர் : படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது பழக்கதோஷத்துல எந்திரிச்சு வெளியே போயிட்டார்.


டாக்டர் : அதனால அடிபடுமா?!


நண்பர் : இவர் படம் பார்த்தது விமானத்துல ஆச்சே!


குருவி பார்த்திருப்பாரோ?
_________________

என்னைக் கடிச்ச கொசுவைப் பிடிச்சேன். அப்புறம் கொல்லாம பறக்க விட்டுட்டேன்.

ஏண்டா?


பயபுள்ள.. அது உடம்புல(!) இருக்கறது நம்ம ரத்தமாச்சேடா! அந்தப் பாசம்தான்.


பீலிங்ஸ் ஆஃப் இந்தியன்ஸ்
_________________

கோயில்ல ஒரு பையன் “பிள்ளையார் மாமா காப்பாத்து”ன்னு வேண்டிக்கிட்டான். அது ஏன்?

எதுத்தாப்ல ஒரு வயசுப் பொண்ணு “பிள்ளையார் அப்பா காப்பாத்துப்பா”ன்னு வேண்டிக்கிட்டு இருந்தா.. அதனால தான்..