Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

வாழத்தெரியாத வாழ்க்கை

நேற்று மார்ச் 24, 2008 அமித் என்ற இளைஞர் அவரது மனைவி ரிங்குவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமித் புத்திராஜ், 30, பெங்களூர் இன்போசிஸிலும், ரிங்கு சச்தேவ் ஸ்டாண்டர்ட் சாடர்ட் வங்கியிலும் வேலை பார்த்து வந்தனர். ரிங்குவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினாலேயே கொலை செய்ததாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ஹோலிப்பண்டிகையன்று (நேற்றுமுன்தினம்) தொலைபேசியில் அமித்துடன் பேசியதாகவும் சந்தோசமாகவே பேசியதாகவும். இப்படி ஒரு சம்பவத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான சுட்டி

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும். நேற்று மற்றும் இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள இந்த செய்தி மிக்க மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்கொலை என்பது அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவு என்கிறார்கள். கொலையும் அப்படியா?

எந்த காரணமாக இருந்தாலும் வாழ்வை வாழவேண்டிய வயதில் தவறிய இருவருக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.

எவ்வாறு இதை அவர் எதிர்கொண்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Posted in Labels: |

திருமண சந்தை

திருமண சந்தை

திவ்யா அக்கா ரெண்டு பதிவு போட்டிருக்காங்க பொண்ணு பாக்க போகலாம் வாங்க பாகம்1, பாகம்2,ன்னு நல்ல காமெடியான பதிவு.

“திருமணம் தேவையா இல்லையா” அப்படிங்கிறதே ஒரு பெரிய வாதத்திற்கான தலைப்பு. இதை பத்தி ஏற்கனவே திருமணம் ஓர் அலசல்னு ஒரு பதிவு போட்டாச்சு.

இந்த பதிவு திருமணம் தேவை அதுவும் அப்பா அம்மா பாத்து வைக்கிற பொண்ணு / பையன் தான் கல்யாணம் பன்னுவேன்.

சைட் அடிக்கிறது கடலை போடறது எல்லாம் டைம் பாஸ்-க்கு கடைசில அண்ணா அண்ணான்னு அல்வா குடுத்திடுவோம் / உன்னைய பாத்தா செத்து போன எங்க ஆயா மாதிரியே இருந்திச்சுமா அதனாலதான் இவ்வளவு நாளா பேசி பழகிகிட்டிருந்தேன் அப்படின்னு கழட்டி விட்டுடுவோம் என்கிற கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்காக.

இப்பல்லாம் ரொம்ப ஈஸியா போயிடிச்சு ஏகப்பட்ட மேட்ரிமோனி வலைதளங்கள், பேப்பர் ஆட், ஜாதக பரிவர்தனை நிலையங்கள் அது இதுன்னு இருந்தாலும் பலருக்கு வரன் கிடைப்பதுக்கு ரொம்ப நாள் ஆகுது ஏன்?



பாத்தா இந்த பெரியவங்க பன்ற காமெடிதான். எப்படியும் பேமிலிலயே ஒரு ஜோசியர் இருப்பார் இல்லைனா அவங்களுக்குன்னு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தர் இருப்பார். அப்பிடி தப்பி தவறி இல்லைன்னா எதாவது ஒரு ஜோசியர் அக்கம் பக்கம் மாமிகளெ ரெபர் பன்னிடுவாங்க.

அந்த ஜோசியர் கிட்ட பையனோட / பொண்ணோட ஜாதகத்தை காமிச்சி அவரும் ஒரு நாலு நட்சத்திரத்தை எழுதி குடுத்து இதெல்லாம் இந்த ஜாதகத்துக்கு நல்லா சேரும்னிடுவார்.

பேப்பர்லயோ / மேட்ரிமோனி சைட்லயோ ஒரு ஆட் குடுப்பாங்க. குடுத்தா வர்ற ஒரு ஐம்பது ரெஸ்பான்ஸ்ல நாப்பத்து அஞ்சை நட்சத்திரம் சேரலைன்னு தூக்கி அந்தாண்ட வெச்சிருவாங்க. மொதல் பில்டரேசன் இங்க ஆரம்பிக்குது. ஆனா கரெக்டா பாத்தா இதுல பாதி சேரும் அது வேற விசயம்.

மீதி இருக்க அஞ்சும் கூட உயரம் / குட்டை நொள்ளை நொட்டைன்னு தானாவே சேராது.

அப்பிடி தப்பிதவறி ஒன்னோ ரெண்டோ சேர்ந்ததுன்னா லெட்டர் எழுதுவாங்க பாருங்க என்னமோ எக்ஸாம் எழுதற மாதிரி நாலு நாளைக்கு ஒரு லெட்டரை எழுதி அதை போஸ்ட் பன்னிட்டு சரி போன் வரும்னு உக்காந்திருந்தா அதுக்கு ரெஸ்பான்ஸே இருக்காது. இந்த சைடு எப்படியோ அப்பிடித்தானே அந்த சைடும் இருக்கும்!!

சரி லெட்டர் போட்டு பத்து பதினெஞ்சு நாள் ஆச்சு நாமளே ஒரு போன் போடுவோம்னு போட்டா அடடா நீங்க லெட்டர் போட்டேளான்னு ஆச்சர்யமால்லாம் கேப்பாங்க. சரி எதுக்கும் ஜாதகம் ஒரு காப்பி அனுப்பிடுங்களேன்னு ‘கூலா’ சொல்லுவாங்க.

நம்ம ஜோசியர் இந்த ஜாதகம் சேருதுன்னு அடிச்சி சொல்லுவார், ஆனா ஆப்போசிட் பார்ட்டி ஜாதகம் பொருத்தமே இல்லையேன்னு சொல்லுவாங்க. இதெல்லாம் ரொம்ப சகஜமா நடக்கும்.


loop
If not
Go to top தான்

கடைசில பாத்தா சம்பாதிக்கிறது என்னவோ வெப் சைட்காரனும், பேப்பர்காரனும் தான்.

திரும்ப புது ஆட் புது லெட்டர் புது போன் கால். இப்படி பாத்து தப்பித் தவறி ரெண்டு சைடும் ஓகே ஆச்சுன்னா

அடுத்த கட்ட பில்டர்

பையன் / பொண்ணு கலர் கம்மியா இருக்க மாதிரி இருக்கே.
சம்பளம் வெறும் முப்பதாயிரம்தானா இதை வெச்சு இந்த காலத்துல எப்படி குடும்பம் நடத்துவாளோ!!!???

என்னது பையனோட உடன் பொறந்தவா ரெண்டு தங்கச்சியா அப்ப அவாளுக்கு கல்யாணம் பன்னியே இவன் ஓட்டாண்டி ஆயிடுவானே.

என்னது பையனோட அப்பா, அம்மா பையனோட இருக்காளா? (பின்ன என்ன ரோடுலயா விட முடியும்) நம்மாத்து பொண்ணு போய் அவாளுக்கெல்லாமா எல்லா வேலையும் செய்யனும்!?!?!?!.

அவங்க வீட்டுல அந்தம்மிணிதான் விடிய காலைல 9 மணிக்கு!! எந்திரிச்சி என்னம்மா தினைக்கும் இதே டிபன் பன்றயேன்ற லெவல்ல இருக்கும் அது வேற விசயம்.

இப்படி பல கட்ட பில்டரேசன் தாண்டி
பையனா இருந்தா உங்களுக்கு ஒரு ரெண்டு நிமிசம் பேசறதுக்கு டைம் கிடைக்கும் அப்ப பேச வேண்டிய டயலாக்தான் மேலே குடுத்த திவ்யா எழுதிய லிங்க்.

எனக்கென்னமோ நிறைய விட்டுட்ட மாதிரி ஒரு ஃபீலிங் சரி எப்படி இருந்தாலும் பின்னூட்டத்தில நீங்கதான் சொல்லிடுவீங்களே!!! இல்லைனா ஞாபகம் வற்றப்ப இன்னொரு போஸ்ட் போட்டுடலாம்!!!

டிஸ்கி : இவ்வளவு எழுதிட்டு டிஸ்கி போடலைனா என்னைய தாளிச்சிற மாட்டிங்களா எங்க வீட்டுல இன்னும் லைன் க்ளியர் ஆகலை இதெல்லாம் நடந்த நடந்துகிட்டிருக்கற விசயம்தான் ஆனா எனக்கில்லை. நான் அவன் இல்லை.

முயற்சி திருவினை ஆக்கும்

ஒருத்தன் அதி தீவிர பக்தன். ஒருநாள் கடவுள்கிட்ட கடவுளே என் தொழில் பெருத்த நஷ்டம் ஆயிடிச்சு நான் ரொம்ப நொடிஞ்சி போயிட்டேன் வர்ற லாட்டரி குலுக்கல்ல மொத பரிசு 1 கோடி எனக்கு கிடைக்கற மாதிரி பண்ணிடு நான் பொழைச்சுகிறேன்னு வேண்டி அழுதானாம்.

அடுத்த நாள் திரும்ப கடவுள்கிட்ட கடவுளே நான் எவ்வளவு வேண்டியும் நீ கருணை காட்டலை என் தொழில் மூழ்கிடிச்சு இப்பவாவது கருணை காட்டு இன்னைக்கு குலுக்கல்லயாவது 1 கோடி கிடைக்கிற மாதிரி பண்ணு இல்லைனா என் வீடு ஜப்தியாயிடும்னு கதறி அழுது வேண்டினான் கடவுளுக்கும் ஐயோ பாவம்னு ஆயிடிச்சி.

ஆனால் அடுத்த நாள் திரும்ப வந்து கடவுளே என் மேல உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லயா என் தொழில் போயிடிச்சி, வீடும் ஜப்தியாயிடிச்சி அதனால என் பொண்டாட்டி பிள்ளைங்கள்லாம் என்னைய வெறுத்து விட்டுட்டு போக போறாங்க இந்த தடவயாவது 1கோடி கிடைக்கிற மாதிரி பண்ணுன்னு பொரண்டு அழ ஆரம்பிச்சான்.

கடவுள் டென்ஷனாகி முட்டாபயலே அதுக்கு போய் லாட்டரி டிக்கட் வாங்குடா மொதல்லன்னு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்.

சொல்ல வருவது என்ன என்றால் எதாவது ஒன்று நடக்க வேண்டும் என நாம் நினைத்தால் ஆசைப்பட்டால் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் அப்போதுதான் அது நிறைவேறும்.

முயற்சியே செய்யாமல் நிறைவேறவில்லை எனக்கு அதிர்ஷ்டமே இல்லய்யா என புலம்புவது வீண்.

டிஸ்கி : நிறைய பின்னூட்டம் வேணும்னா நல்ல பதிவாக போட வேண்டும் என்பது இல்லை, மொக்கை போட்டாலே போதும். பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது வேறு விசயம் :-)).

தமிழில் பங்கு சந்தை குறித்த எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

தாரா தாரா நயன்தாரா...

நாம் யாரையாவது கம்பேர் பண்ணறப்ப சாதாரணமா கேள்விப்படற டயலாக் அஞ்சு விரலும் ஒண்ணு மாதிரி இருக்காதுடா அப்படின்கிறதுதான்.

எதாவது ஒரு எடை அதிகமான பொருளை தூக்கவோ அல்லது கெட்டியாக பிடிப்பது போன்ற வலுவை வெளிபடுத்தவோ அந்த அஞ்சு விரலும் ஒன்றாக இணைந்தால்தான் முடியும்.

ஒரு காட்டுல இருந்த சிங்கம் ஒவ்வொரு விலங்குகளையா அடிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்திச்சாம்.

அப்போ நான்கு எருதுகள் கூடி பேசி ஒன்றாகவே இருப்போம் என ஒன்றாக இருந்தபோது சிங்கத்தால அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அவைகள் தனித்தனியாக பிரிந்தபோது ஒவ்வொன்றாக சிங்கம் அடித்து சாப்பிட்டுவிட்டது ஒற்றுமையே வாழ்க்கை என மூன்றாம் வகுப்பில் படித்த நீதிக்கதை.

எல்லாருடைய கருத்துக்களும் எல்லாராலும் ஒத்துக்கொள்ள முடியாதுதான் மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

சரி தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா எல்லாம் ஒரு ‘கொலை’வெறிதான். சாதா ‘ரண’வெறியாத்தான் இருந்தது தமிழ்மண மொத பக்கம் பேர் வருதுல்ல அதனால இப்ப கொலை வெறி.


தமிழில் பங்கு சந்தை குறித்த எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |

பெண்ணடிமைத்தனம் made easy to understand

நன்றி : ஹரிஹரன்

பெண்ணடிமைத்தனம்னு முழங்கி மேம்பட்ட-பெரியாளாகும் பகுத்தறிவு முயற்சி இல்லை இப்பதிவு.

குடும்பத்து மேம்களிடம் டன் கணக்கில் பட்ட அறிவுடன், ஆண்வர்க்கத்தை அவர்கள் வீட்டுக்குள்ளேயே கும்மு கும்முன்னு கும்மி எடுக்கும் பெண்களை, ஆணீய பித்தளைகள் எல்லாம் பெண்ணடிமைத்தனம் செய்தனர் எனும் பரவலான புரட்டை புட்டுவைக்கும் எனது சின்னஞ் சிறு முயற்சி.

உண்மையில் தன்னடிமைத்தனமான பெண்ணடிமைத்தனத்தை made easy to understand விதமாக இப்பதிவு.

அம்மாவாய் சில பல மாதங்கள் முயற்சித்து, தானே முன் நின்று அலசி,தேடித் தெரிவு செய்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக்கி திருமணம் செய்வித்த மகனின் வாழ்க்கையில் திருமணமான சில நாட்களில்(வாரங்களில், மாதங்களில், வருடங்களில்)அதே அம்மா சொல்வது:மகனே நீ உம் பொண்டாட்டி நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆட்டமா ஆடுவேன்னு நான் கனவுலேயும் நினைக்கலைடா... (ஆண்)மகனுக்கு ஜென்மச்சனி உச்சத்துக்கு பெயர்கிறது.

இதுக்காடா உன்னை பெத்து வளர்த்து படிக்கவச்சு நானும் உன் அப்பாவும் ஆளாக்கினது? (அப்பாவின் விருப்பம் இல்லாமலே இந்த அம்மா-மருமகள் எனும் இரு பெண்கள் மேட்டரில் அவரும் அய்யோ பாவத்துக்கு உள்ளுக்கு இழுக்கப்படுகிறார்)

அம்மாவுக்கு என்ன ஆச்சு காலங்காத்தால? என்னைத் தாளிக்கிறா? என்று குழம்பிய படியே மகன் தன் அறைக்குள் சென்றால்... அங்கே இன்ஸ்டண்ட் கண்ணீருடன் மனைவி... உங்கம்மா என்னைத்தானே சொன்னாங்க? நீங்க கேட்டுட்டு ஏன் வாயை மூடிட்டு இருந்தீங்க? ரெண்டு குழந்தைக்கு அப்பா ஆகியாச்சு இன்னும் அம்மாக்கோண்டுவாக அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே நடப்பீங்க்களா? என்னை "யார்" என்ன சொன்னாலும் பரவாயில்லையா?

குளிக்க அவசியமில்லாமல் மனைவியின் அங்கலாய்ப்பு அருவியில் குளித்து வரும் (ஆண்)மகன் ஹாலில் அப்பா பேப்பருக்குள் வசதியாக தன்னை மூழ்கடித்துக்கொண்டதில் ஏதோ ஒரு சாமர்த்தியம் இருப்பதை மெல்ல உணர்கிறார்.

இப்படி விடுமுறை தினத்தில் அம்மா, மனைவின்னு ரெண்டு பேரும் எப்படா விடியும்னு காத்திருந்தது இப்படி தன் தலையில் வந்துதான் விடியணுமா?ன்னு க்ராஸ்பய்யரில் மாட்டிக்கொண்டுவிட்ட தன் அவலநிலையை (ஆண்)மகன் நொந்துகொண்டு இருக்கும் போதே தனது மகள் வந்து அன்றைய நாளேட்டில் வந்த க்ராஸ்வேர்டு-குறுக்கெழுத்துப் புதிருக்கு வகபுலரியில் உதவ வேண்டியதை ஏற்காமல் மறுத்த மறுவிநாடி அந்தச் சின்னப்பெண்ணோ, அவள் அம்மாவாகிய தன் மனைவி தந்த பாலபாடம் முன்னெடுத்துச்செல்ல" போ..அப்பா... உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்ற சர்டிபிகேட் தந்து மும்முனைத்தாக்குதலில் (ஆண்) மகனை ஆழ்த்திடுகிறாள்.

சோபாவில் பேப்பர் கொஞ்சம் கீழிறங்கி மறைந்திருந்த அப்பாவின் முகம் கண்கள் அளவுக்குத் தெரிய அந்தக் கண்களில் அதீத அனுதாபம் தென்படுவதாக உணர்கிறார் (ஆண்)மகன்.

மத்தியானம் சாப்பிட்டுவிட்டு அம்மா தனியாக இருக்கும் நேரத்தில் மனைவியின் மாமியாராகிய தனது அம்மாவிடம் கட்டாயமாகத் தெரிவித்துவிடும்படி (எச்சரித்து)சொல்லிய கருத்தை தூதுவராக அம்மாவிடம் திக்கித் திணறித் தெரிவித்து முடிக்குமுன்பே... "மகனே உனக்கு இப்படி தலையணைமந்திரம் போட்டு வச்சிருக்காளேடா உம்பொண்டாட்டி... நீயும் அவ போட்ட மந்திரத்துக்கு சாமிவந்த மாதிரி ஆடுறியேடா"-ன்னு அம்மா சாமியாடி முடிக்க...

தன் அறைக்குள்ளே போனால் "மீண்டும் அம்மாக்கோண்டு... உங்களுக்கு எதுவும் தெரியாது" எனும் பட்டம் 1008வது முறையாக தன் குழந்தைகள் முன்னிலையில் தரப்படுவதை நினைத்து மீண்டும் செல்ல பயப்பட்ட நிலையில் தவிக்கும் (ஆண்)மகனை நோக்கி அம்மாவீட்டுக்கு வந்திறங்கிய, அம்மாவின் அணி நிரந்தர சப்போர்ட்டரான தன் சகோதரி அண்ணா /டேய் தம்பி... நீ கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டன்னு கண்களின் ஷட்டரைத் திறந்து 1-டிஎம்சி இன்ஸ்டண்ட் கண்ணீரை வெளியேற்ற...அங்கே வந்த அம்மாவோ... சபாஷ் ..வந்தும் வராததுமா கூடப்பிறந்தவளைக் கண்கலங்க வைச்சுட்டயேடான்னு அடுத்த எபிசோடை ஆரம்பிக்க...

கிச்சனில் பலமான பல பாத்திரச் சத்தங்கள் செய்தபடியே மனைவி வேலை செய்வதில்- ஈராக்கில் அமெரிக்கா+பிரிட்டிஷ் கண்டுபிடிக்காத WMDயை தான் கண்டுபிடித்துவிட்டதாக மனசுக்குள்ளே உணர்ந்தாலும் ... முந்நாள் ஹீரோவான (ஆண்)மகன் தன் நிலையை WMD விழுந்த ஹிரோஷிமாவாக்கிக் கொள்ள விரும்பாமல் 1500வது முறையாக அடங்கிப்போய் நழுவ...

அப்பா தன்னுடைய எழுபதுவயதில் ஏன் காய்கறி மார்க்கெட்டுக்கு கறிகாய் வாங்க ஒரு நடை, பச்சைமிளகாய்க்கு ஒரு நடை, கறிவேப்பிலைக்கு ஒரு நடை, கீரைவாங்கன்னு ஒரு நடைன்னு லூசுமாதிரி இருக்கிறார் என்பதில் இருக்கும் சூட்சுமம் புரிகிறது. After all it is necessary to get fresh air very often - which is directly to the proportion of number of பெண்மணிகள்(வயது வித்தியாசம் இல்லாமல்) in the home)இப்போ பெண்ணடிமைத்தனம் அப்டீன்னா என்னன்னு பார்க்கலாம்.

அடிமைத்தனம் அப்டீன்னா என்னங்க? நம்ம விருப்பத்திற்கு, சொல்லுகிற சொல்லுக்கு வரவேற்பு, மரியாதை இருக்காத நிலையை அடிமைத்தனம்னு சொல்லலாம்.

அம்மா எனும் தானே தேடி,அலசி ஆராய்ஞ்சு, விசாரிச்சு, தேர்ந்தெடுத்துத் தந்த வாழ்க்கைத் துணைவி என்று இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட்டு... பழியை எல்லாம் மகன் மேலே சுமத்துவது... பொண்டாட்டியோட நட்டுவாங்கத்துக்கு ஆடுறவன்...தலையணை மந்திரத்துக்கு மயங்கினவன்ன்னு பழிக்கவேண்டியது,

மனைவி எனும் பெண் கல்யாணமானவுடனே கணவனை அவனது தாயாரிடம் இருந்து கத்தரிக்க ஆனதைச் செய்யவேண்டியது... அம்மாக்கோண்டு என்பது.... அலுவலகத்தில் திறமையான மேலாளராக இருந்தாலும் ...உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...ஒரு மண்ணும் தெரியாதுன்னு கும்ம வேண்டியது...

சகோதரி எனும் பெண் "கல்யாணத்துக்கு அப்புறமா நீ ரொம்ம மாறிட்ட"ன்னு பத்திரம் தரவேண்டியது... கல்யாணமானா.. எப்படி அப்படியே இருப்பது... கணவனாக..குழந்தைகளுக்கு அப்பாவாக என்று முன்னில்லாத கூடுதல் கடமைகள் என பல மாற்றங்கள் வந்துவிட்ட வாழ்க்கை...

இதில் எப்படி அப்படியே இருந்து தொடர்வது?ஒரு ஆணின் வாழ்க்கையில் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்கள் கூட்டணி இப்படி முன்னே போனால் கடிப்பதாக... பின்னே வந்தால் உதைப்பதாக இருந்து அவர்களாக அவர்களை ஆட்டுவித்துக்கொண்டுவிட்டு அய்யோ பெண்ணடிமைத்தனம் என்றால்...

அது தன்னடிமைத்தனம்.தலைமுறை தலைமுறையாக இவ்வளவுக்கு முன்னுக்குப்பின் முரண்படும் அம்மா-மனைவி-சகோதரி எனும் பெண்களது நச்சரிப்புப் பேச்சை ஆண்கள் நாள்போக்கில் சீரியஸாக மதிப்பும் மரியாதையும் தந்து வரவேற்று எடுப்பது குறைவதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

குரல் கொடுப்பது என்றால் உண்மையில் பாதிக்கப்பட்ட கல்யாணமாகி, அம்மா-மனைவி-சகோதரியாகிய இப்பெண்களிடம் தினசரி"எமோஷனல் ப்ளாக்மெயில்", எமோஷனல் பிக்பாக்கெட் நிகழ்வுகளில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கும் அபலை(ஆண்)மகன்களுக்குக் குரல் தருவதே நியாயம்!

இன்னொருதரம் பெண்ணடிமைத்தனம்னு சொல்லுமுன் யோசிங்க ... திருத்திச்சொல்லுங்க.. அது தன்னடிமைத்தனம் என்று!

அன்புடன்,
ஹரிஹரன்

Posted in Labels: |

வாழ்வின் ஒரு சுவை

நானும் ரொம்ப நாளா இந்த விசயத்தை எழுதனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் டைம் கிடைக்காத்தனால கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.

வாழ்க்கைனா இன்பம் துன்பம் எல்லாமே இருக்கும்னு சொல்லுவாங்க ஆனா இன்னும் 'கல்யாணம் ஆவாதனால' அந்த ‘துன்பம்’ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஜாலியா வெட்டியா பீச், பார்க், சினிமா, ஷாப்பிங், நினைச்ச நேரத்துக்கு ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது வற்றதுன்னு சுத்திகிட்டு இருந்தேன்.


மங்களூருக்கு வந்து ஒரு 3 இல்ல மூன்றரை வருசம் ஆயிருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியாதான் போய்கிட்டு இருந்தது லைப். அப்பதான் திடீர்னு ஒரு நாள் இங்க மங்களூர்ல இந்து முஸ்லிம் கலவரம்னு டிவி பொட்டி சொல்லுது.

அந்த டைம் தான் எங்க ஆபீஸ்க்கு கலீக் ஒருத்தர் டெபுடேசன்ல வேற வந்திருக்கார். என்னாடா வந்த அன்னிக்கே எதாவது தப்பு தண்டால எறங்கிட்டாரானு நாங்க பசங்கல்லாம் போன் போட்டு கலாய்ச்சிகிட்டு இருந்தோம்.

சரி எங்கியாவது 'அவிங்க' ஜாஸ்தியா இருக்குற அவுட்டர் ஏரியால இருக்குமா இருக்கும் நாம தான் சிட்டி உள்ள இருக்கமேனு பெருசா ஒண்ணும் அலட்டிக்கல.

சரி ஏன் கலவரம்னு இப்ப பாக்க வேணாம் ஏன்னா சொல்ல வருகிற விசயம் வேற பாதைக்கு மாறிடும்.

அன்னைக்கு ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும் அதுக்குள்ள ஆபீஸ்ல யார பாத்தாலும் இதை பத்திதான் பேச்சு. அதுக்குள்ள ஒரு தகவல் வந்திச்சு சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டிருக்காங்கன்னு.



இதை பத்தில்லாம் அதிகமா கேள்விகூட படாததினால கொஞ்சம் பயமாதான் இருந்திச்சு. அப்பதான் 144 னா என்ன curfewனா என்னன்னெல்லாம் டிஸ்கசன். சரி டெபுடேசன்ல வந்திருக்கிறவரை ஓட்டல்க்கு சீக்கிறம் அனுப்பிருவோம்னு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு போனா ஒருத்தனும் இல்ல அஞ்சு மணிக்கே. சரி ஆனது ஆயிபோச்சு நாமலே ட்ராப் பண்ணீடுவோம்னு போனேன்.

பஸ்லாம் நிறுத்திட்டதாலயும் ஆட்டோவும் இல்லாததாலயும் ரோடுல எல்லாரும் நடந்து போய்ட்டிருந்தாங்க. பைக்ல போறப்ப ஒண்ணும் தெரியல பின்னால அவர் உக்காந்திருக்கார்ல பேசிகிட்டே போயாச்சு. ஆனா திரும்பி வற்றப்ப ரோடுல ஒரு ஈ , காக்கா கிடயாது. கொஞ்சம் படபடப்பாதான் இருந்தது. முக்குக்கு முக்கு ஒரு நாலு பேரு நிக்கிறான் அவன் எதுக்கு நிக்கிறான் கட்டைல அடிக்க போறானா இல்ல கல்ல கொண்டு அடிக்க போறானான்னு பயந்துகிட்டே ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த நாளும் சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டுடாங்க. அதனால அன்னைக்கு கலீக்கை சாமி என் வீட்டுக்கே வந்துருய்யா ராசா என்னால இன்னிக்கு ட்ராப் பண்ண முடியாதுனு சொல்லி வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்ட்டேன்.

சின்ன சின்ன கலவரம் அங்க அங்க நடந்ததால அதுக்கடுத்த நாள்ல இருந்து 24 மணி நேரமா நீட்டிச்சிட்டாங்க.

பேச்சிலரா இருக்கிறதால ஒரு அட்வான்டேஜ் என்னனா வெறும் அரிசியும் பருப்பும் இருந்தாகூட போதும் அதை வெச்சி சமாளிச்சிடலாம். எதுக்கும் இருக்கட்டும்னு மாகி பாக்கட், மாரி கோல்ட் பிஸ்கட் அது இதுன்னு கொஞ்சம் ஸ்டாக் பண்ணி வச்சிருந்ததால எனக்கு ஒரு கஷ்டமும் தெரியல.

ஆனா என் வீட்டுக்கு கீழ் மாடில இருந்த 4 நண்பர்கள் (அவங்க பேர் எல்லாம் அப்ப தெரியாது) அவங்களும் பேச்சிலர்ஸ்தான் ஆனா ஹோட்டல்ல சாப்பிடறவங்க வயித்துக்கு தான் எதுவும் தெரியாதே டைத்துக்கு கூவ ஆரம்பிச்சிடுமே, ஹோட்டலை தேடிப்போய் போலீஸ் லத்தியால செமயா அடிச்சிட்டாங்க. அன்னைக்கு முழுசும் சாப்பிடாம இருந்திருக்காங்கன்னு அப்புறமாதான் தெரிய வந்தது.

நான் இருந்த அபார்ட்மெண்ட்ல குழந்தைங்க, வயசானவங்களோட ரொம்ப பேர் பால் இல்லாம, காய்கரி இல்லாம மருந்து, மாத்திரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க.

எல்லாரும் மொட்ட மாடில நின்னுகிட்டு ரோடயே பாத்துகிட்டு அவங்கவங்களுக்கு தெரியவந்ததை பேசிகிட்டோம். இன்னும் சொல்லப்போனா அந்த அபார்ட்மெண்ட்ல நான் மூணு வருசமா இருக்கேன்றது அவங்களுக்கு தெரியும் ஆனா என் பேர அப்பதான் கேட்டு தெரிஞ்சிகிட்டாங்க. நானும் அப்டிதான்.

தூங்கற டைம் போக மீதி டைம் எல்லாம் லோக்கல் டிவி (நம்ம ஊர் AMN TV, கரண் டிவி மாதிரி ) பாத்துகிட்டே இருந்தோம் ஏன்னா அதுலதான் அடிக்கடி அப்டேட் வந்துகிட்டு இருந்தது.

அடுத்த நாள் ரேஷன் மாதிரி ஒரு 2 மணி நேரம் curfew relax பண்ணாங்க. அப்ப ஒவ்வொரு கடைலயும், மெடிக்கல் ஷாப்லயும் அந்த 2 மணி நேரத்துக்குள்ள வாங்கிட்டு போயிடனும்னு அலைமோதுற கூட்டத்தை பாத்தா வாழ்க்கைனா என்னன்னு புரியாதவனுக்கும் புரியும்.

அந்த ரெண்டு மணி நேரத்தில ஏறக்குறைய எல்லா கடைலயும் எல்லா ஸ்டாக்கும் காலி ஏன்னா ஊரடங்கு இருக்கிறதால ஹைவே எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்க கடைக்கெல்லாம் சப்ளை இல்ல. எதாவது கிடைச்சா போதும்னு காஞ்சுபோன காய்கறியெல்லாம் க்யூல நின்னு வாங்கினாங்க.

ஊரடங்கு என்னைக்கு வரைக்கும்னு யாருக்கும் தெரியாது வேற. நான் என் கீழ் வீட்டுகாரங்களுக்காக துவரம்பருப்பு வாங்க 7,8 கடைக்கு ஓடினேன்.

காசு எவ்வளவு இருந்தாலும் அதை சாப்பிட முடியாதில்ல. பணம் சேர்ப்பதை தவிரவும் பல விசயங்கள் வாழ்வில் இருக்குன்னு உறைக்கிற மாதிரி அடிச்சி சொன்ன நிகழ்சி அது. எதோ எழுதியிருக்கிறேனே தவிர அந்த நாட்களில் இருந்த மன நிலையை வார்த்தைகளில் உணர்த்த முடியாது.

Posted in Labels: |

முடியாதது உலகில் கிடையாது

முடியாதது என்பது உலகில் கிடையாது ஆங்கிலத்தில் "நட்த்திங் இஸ் இம்பாசிபள்' என்பார்கள் கீழே இருக்கும் படங்களை பாருங்கள் கண்டிப்பாக நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.

முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்வார்கள்.


எப்போது உன்னால் முடியாது என பிறர் சொல்கிறார்களோ



யோசி


நன்றாக யோசி


எல்லா வழி முறைகளையும் ஆராய்ந்து பார்



முடிவெடு


உன்னில் இருக்கும் எல்லா ச்ச்க்திகளையும் பயன் படுத்து


தளர்ந்து விடாதே


வெற்றி எளிதானதல்ல எட்ட முடியாததல்ல

Posted in Labels: |

நாம் தான் காரணம்

என்னிடம் நிறைய பேர் குறைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்."அவனால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன்.""அவர்கள் செய்த செய்கையால் தான் எனக்கு இந்த நிலைமை.""அவனை நம்பால் இருந்திருந்தால் எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வந்திருக்காது"இவ்வாறு நிறைய.

இவர்கள் குறைப்பட்டுக் கொள்ளும் பொழுதுயெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். கூடவே கேள்விகளும் வரும். எப்படி இவர்களின் அனுமதியில்லாமல் அது நடந்திருக்க கூடும்?.

தன் வாழ்க்கையினை யாரிடமோ ஒப்படைத்துவிட்டு எப்படி இவர்களால் இருக்க முடிகிறது? இவர்களை மீறி எப்படி ஒருவர் இவர்களுக்கு துன்பம் விளைவிக்க முடியும்.இதன் அடிப்படைக் காரணத்தை அறிய ஆசைப்பட்டேன். அதை என்னிடமே தேடியப் போது, எனக்குத் தோன்றியது ஒன்று தான். இவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். நல்லது கெட்டதை யோசிக்க மறுப்பவர்கள்.

தனக்கு எது நல்லது என்பது தன்னை விட மற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்பும் முட்டாள்கள். தன்னை விட மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் அதனால் யார் என்ன சொன்னாலும் எதனையும் ஆராயாமல் அதன்படி உடனே செய்வார்கள். அவர்கள் செய்ததின் மூலம் நல்லது நடப்பின் தங்களால் நடந்தது என்றும், கெட்டது நடப்பின் பிறரால் நடந்தது என்றும் பேசுவார்கள்.

இவர்களுக்கு நான் ஒன்றை தான் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன் அது,"தீதும் நன்றும் பிறர் தர வாரா" .

Posted in Labels: |

மனச்சோர்வு (Depression)

நன்றி : பாரதி

நேற்று காயத்ரியின் "வாழ்வை சுமத்தல்" பதிவை படித்துவிட்டு சோகத்தில் திரிந்தபோது கண்ணுக்கு ஆறுதலாய் கிட்டிய பதிவு.

பிரச்னையில்லாத மனிதர்களே கிடையாது. பிரச்னைகளின் உச்சக்கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு பலர் கஷ்டப்படுகிறார்கள். Bipolar disorder என்ற வியாதியால் (சந்திரமுகி, அந்நியன் கதைகளின் கரு) பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

என் பழைய நண்பன் ஒருவன் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். தன் சொந்த அம்மாவையே கொலை செய்ய முயற்சித்திருக்கிறான். என்னுடன் வேலை பார்த்த ஒரு அமெரிக்க பெண்மணி மதிய சாப்பாட்டு நேரத்தில் ஆப்பிள் நறுக்கும் கத்தியை எடுத்து தன் கை நரம்புகளை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன் இருக்கையிலே மயங்கி கிடந்தார். Bipolar வியாதியால் வந்த தற்கொலை எண்ணம் தான் காரணம்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற வியாதிகள் இருந்தால் மனோதத்துவ நிபுணர்களை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் மனோதத்துவ மருத்துவர்களை பார்ப்பது கௌரவ குறைவாக கருதப்படுவதால், பலர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தங்களையும் வருத்தி மற்றவர்களையும் டார்ச்சர் செய்கிறார்கள்.

பைபோலாரினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் அனுபவங்களையும் தீர்வுகளையும் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். அமெரிக்க வாரப்பத்திரிகை (Businessweek) பாராட்டி எழுதிய சில வலைப்பதிவுகள்:

http://tenminutefreefall.blogspot.com/


Blogs.HealthCentral.com/depression/deborah-grays-blog


NickMack.net