தமிழ் மொழியில் இன்சினியரிங் - செம காமெடி

தமிழ் மொழியில் இன்சினியரிங். ஐயா புன்னியவான் அரசியல் வியாதிகளே உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

கீழ இருக்குறதெல்லாம் ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டம் படிச்சி பாருங்க நல்ல நகைச்சுவையா இருக்கும்!!!
//
தாய்மொழியில் யாரும் சந்திரமண்டலம் வரை செல்ல முடியும்.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய எந்த நாட்டையும் உதாரணமாக பார்க்கலாம்.பெல்ஜியம்,லக்சம்பேர்க் போன்ற குட்டி நாடுகள்கூட தங்கள் சொந்த மொழியில்தான் போதிக்கின்றார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தியா வல்லரசாக கனவுகாண்பதில் தவறில்லை. அதற்கான முழுத் தகுதியும் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தன்னம்பிக்கை இல்லை என்பது எனது ஆழமான கருத்து. தனது சொந்த மொழிகளை போதானை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும்இந்தியாவால் நடைமுறைப்படுத்தாத வரை இந்திய மொழிகள் எவ்வாறு வல்லரசு மொழியாகப் போகிறது? ஒரு வல்லரசு வேறு ஒரு நாட்டு மொழியில் நிர்வாகம் செய்யவும், போதிப்பதும் தன்மானக்குறைவாக இல்லையா? ஏன் பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற நாடுகளுக்கு உள்ள தன்மானமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இல்லாமல் போனது?//

//
தமிழ் நாட்டில் மட்டுமே வேலை செய்ய பொறியியல் படிப்பதில்லை ,என்பதால் இது சாத்தியம் இல்லாதது, ஜப்பானில் ஜப்பானிய மொழியில் பொறியியல் படிக்கலாம் , காரணம் அவர்கள் மொத்த நாட்டுக்குமே அது மட்டும் தான் மொழி.

நம் நாட்டின் மொழியியல் குளறுபடிகள்.உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.automobile என்பதை +2 இயற்பியல் பாடப்புத்தகத்தில் தானியங்கிகள் என்று போட்டு இருப்பார்கள்.ஆனால் அதைப்படிக்கும் ஒரு மாணவன் அதை automatic என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இங்கே வலைப்பதிவில் கூட பலரும்(அல்லது சிலர்) auto என்பதை தானி என்று சொல்லி எழுதுகிறார்கள், அது "automobile" என்பதன் சுருக்கமான ஆட்டோ என்பதன் தமிழாக்கமே. ஆனால் தானி என்று சொன்னால் இங்கே பல காலம் வலைப்பதிவில் புழங்கியவர்களுக்கே புரியவில்லை. அதே போல தான் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு போனாலும், ஆனால் அதற்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்படும் "ஷாக்" களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

பொறியியலை தமிழ் நாட்டில் தமிழில் படித்துவிட்டு ஆந்திராவில் கூட பின்னர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஏன் எனில் தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை!
//

//தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை//
India is union of states. இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் தமிழ் மொழி ஒரு தேசத்திற்கான அதாவது ஒரு நாட்டிற்கான தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி என்பதும், தமிழ்மண்ணின் பொருளியல் தன்னிறைவு என்பதும் சத்தியமாக சாத்தியமே. எப்படி அடுத்த நாடுகளுடன் ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்கிறதோ அதேபோன்றே நாம் அண்டை தேசங்களான ஆந்திரா, கர்னாடகா போன்றவற்றுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். தமிழன் என்றைக்கு இந்தியக் கூட்டமைப்பில் இணைந்தானோ, அன்றையிலிருந்து தன்னம்பிக்கையையும் இழந்து தவிக்கிறான்.-
க. இளஞ்செழியன்
//

எப்பா இளஞ்செழியா அப்ப கர்னாடகாவுக்கு, ஆந்திராவுக்கு, கேரளாவுக்கெல்லாம் போக பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமா?


//வருடம் தோறும் பொறியியல் படிப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் வழி படித்தோர் சேர்கிறார்கள், எல்லாரும் தற்கொலை செய்துக்கொள்வதில்லையே, அப்படிப்பார்த்தால் நான் தான் முதலில் செய்துக்கொண்டு இருப்பேன்!//

//
தமிழ் ஒரு தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை,ஹிந்திக்கே அரசு மொழி என்று தான் பெயர், தேசிய மொழி என்றல்ல.
//
//
இப்போ இந்தியாவில் ஆங்கிலத்தில் பொறியியல் படித்திருந்தாலும், இங்கிலாந்த், அமெரிக்கா என மேல் படிப்புக்கு போக GRE, TOFEL. IELTS, என்று தேர்வெழுதி அதில் ஆங்கிலப்புலமையை ஏன் காட்ட சொல்கிறான்.அவன் ஸ்டாண்டர்ட்கு நாம இல்லைனு தானே.இந்தியாவில் தமிழில் பொறியியல் படித்தால் அப்புறம் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு போக தனியாக ஒரு தேர்வு வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
//
இப்பவே இன்சினியரிங் என்ட்ரன்ஸ் அப்பிடித்தானே இருக்கு

//
பொறியியலை தமிழில் படிக்க வைத்தால் இப்போ புரியலைனு செத்தவங்க வெளில வேலைக்கு போக முடியலைனு சாவாங்களே அதுவும் தமிழ் வளர்ச்சி தானா?
//

//
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தாய்மொழி தமிழிலும் ஆந்திரர் தெலுங்கிலும்,கேரள நாட்டினர்மாலையாள மொழியிலும் படிக்க சாத்தியப் படும் பட்சத்தில்
//
அப்ப மீதி இருக்க 25 ஸ்டேட் ஆளுங்க ????

Posted in Labels: , |