தாரா தாரா நயன்தாரா...

நாம் யாரையாவது கம்பேர் பண்ணறப்ப சாதாரணமா கேள்விப்படற டயலாக் அஞ்சு விரலும் ஒண்ணு மாதிரி இருக்காதுடா அப்படின்கிறதுதான்.

எதாவது ஒரு எடை அதிகமான பொருளை தூக்கவோ அல்லது கெட்டியாக பிடிப்பது போன்ற வலுவை வெளிபடுத்தவோ அந்த அஞ்சு விரலும் ஒன்றாக இணைந்தால்தான் முடியும்.

ஒரு காட்டுல இருந்த சிங்கம் ஒவ்வொரு விலங்குகளையா அடிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்திச்சாம்.

அப்போ நான்கு எருதுகள் கூடி பேசி ஒன்றாகவே இருப்போம் என ஒன்றாக இருந்தபோது சிங்கத்தால அவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அவைகள் தனித்தனியாக பிரிந்தபோது ஒவ்வொன்றாக சிங்கம் அடித்து சாப்பிட்டுவிட்டது ஒற்றுமையே வாழ்க்கை என மூன்றாம் வகுப்பில் படித்த நீதிக்கதை.

எல்லாருடைய கருத்துக்களும் எல்லாராலும் ஒத்துக்கொள்ள முடியாதுதான் மற்றவர்களை புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

சரி தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா எல்லாம் ஒரு ‘கொலை’வெறிதான். சாதா ‘ரண’வெறியாத்தான் இருந்தது தமிழ்மண மொத பக்கம் பேர் வருதுல்ல அதனால இப்ப கொலை வெறி.


தமிழில் பங்கு சந்தை குறித்த எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |